பத்து வருடங்களாக அறவிடப்பட்ட கோடிக்கணக்கான பணத்துக்கு நடந்தது என்ன! தடுமாறிய அதிகாரிகள்
கிளிநொச்சி - இரணைமடு விவசாயிகள் சம்மேளனத்தால் கடந்த பத்து வருடங்களாக அறவிடப்பட்ட கோடிக்கணக்கான பணத்துக்கு என்ன நடந்தது என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
இந்த கோடிக்கணக்கான பணம் தொடர்பில் மாவட்ட உயரதிகாரிகளுக்கும் பங்குள்ளதா? என நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் எழுப்பிய கேள்விகளால் பதில் கூறமுடியாது அதிகாரிகள் தடுமாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறையாக பதிவு செய்யப்படாத அமைப்பு
குறித்த பணம் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றைய தினம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுகுளத்தின் கீழுள்ள விவசாயிகளிடமிருந்து இரணைமடு சம்மேளனம் என்ற முறையாக பதிவு செய்யப்படாத அமைப்பு ஒன்றின் ஊடாக சுமார் நான்கரை கோடி ரூபாய் நிதி அறவிடப்பட்டுள்ளது.
குறித்த நிதியானது முறையற்ற விதத்தில் செலவு செய்யப்பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த நிதி முறைகேடுகள் தொடர்பில் மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் ஆகியோருக்கு மகஜர்களை கையளித்திருந்த போதும் உரிய பதில்கள் வழங்கப்படாததால் நாடாளுமன்ற கோப் குழுவுக்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
மூன்று கோடி ரூபாய் நிதிக்கு என்ன நடந்தது
இதனையடுத்து தேசிய கணக்காய்வு திணைக்களத்தினால் அதன் ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டு கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுவரை மூன்று கோடி ரூபாய் நிதிக்கு என்ன நடந்தது என கண்டறியப்படாமல் உள்ளது.
குறித்த பணம் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றைய தினம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனால் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
முறைகேடுகளுடன் தொடர்புடைய அதிகாரிகள்
இதன்போது குறித்த முறைகேடுகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் என்ற வகையில் பொறுப்பெற்ற பதில்களை கூற முடியாது என கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் விடுகின்ற தவறுகளால் இவ்வாறு விவசாயிகளின் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதற்கு அதிகாரிகளை அனுமதிக்க முடியாது எனவும், இதற்கு பொறுப்பான அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri