சுரேஷ் சாலே இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா..! சரத் வீரசேகர கிளப்பும் சர்ச்சை
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது நடவடிக்கை அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கர்தினாலையும், கத்தோலிக்க திருச்சபையையும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்ற இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கையாகவே சுரேஷ் சாலே கைதினை நான் கருதுகிறேன். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இதுபோன்ற ஏமாற்று வேலை மேற்கொள்ளப்படுகிறது.
சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கான காரணம் தங்களுக்குத் தெரியாது என்று பொலிஸார் கூறுகின்றனர். ஒரு காரணம் இருக்கிறது. அதுதான் பிள்ளையானின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானா என்ற நபர் சேனல் 4 ஊடகத்திடம், 2018ஆம் ஆண்டு சாலே சஹ்ரானை தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் அவர் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இராணுவத்திற்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டு
அப்போது கூறப்பட்டது, இந்த நாட்டை பாதுகாப்பற்ற நிலைக்கு கொண்டு சென்றால் தான் கோட்டாபய ஜனாதிபதியாக முடியும் என்று. நாம் அறிந்திருப்பது போல, சேனல் 4 என்பது இராணுவத்திற்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை முழுமையாக முன்வைக்கும் ஊடகம். அதனால் தான் சாலே அவர்களை கைது செய்திருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

சுரேஷ் சாலே என்ற அந்த உளவுத்துறை அதிகாரி 2016 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரை மலேசியாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றினார். 2019 ஜனவரி 3ஆம் திகதி முதல் 2019 டிசம்பர் வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இருந்தார். அதாவது, அவர் இலங்கையில் இருக்கவில்லை.
அப்படியானால், இலங்கையில் இல்லாத சாலே எப்படி சஹ்ரானை சந்திக்க முடியும்? இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா என்ற கேள்வி எழுகிறது. அப்படிப்பட்ட உளவு அளவிலான நபர்கள் இலங்கையில் இருப்பதாக யாரும் நம்ப மாட்டார்கள் என்று தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri