அக்குரேகொட இரட்டைக்கொலை! தொலைப்பேசி அழைப்பில் சிக்கிய துப்பாக்கித்தாரி: வெளியான தகவல்
அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கித்தாரி பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்ட கடற்படை வீரர் எனவும், கரந்தெனிய சுத்தாவின் மிகவும் நம்பகமான மற்றும் திறமையான துப்பாக்கிச்சுடு நபராக அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆறு கொலைகளில் தொடர்பு
சிறைச்சாலை அதிகாரியின் கொலை உட்பட ஆறு கொலைகளில் சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இரட்டைக்கொலை தொடர்பாக இரண்டு துப்பாக்கித்தாரிகளையும் அவர்களுக்கு ஆதரவளித்த ஒரு குழுவையும் பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
இந்த இரண்டாவது நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடி அவரது பல புகைப்படங்களை பொலிஸ் பிரிவு ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது.
இத்தகைய சூழலில், மொனராகலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சம்பந்தப்பட்ட நபர் மறைந்திருப்பதாக 119 பொலிஸ் அவசர எண்ணுக்கு குடியிருப்பாளர் ஒருவரிடமிருந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமைக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, மொனராகலை பொலிஸாரின் அதிகாரிகள் குழு நேற்று (24) இரவு குறித்த வீட்டைச் சோதனையிட்டு மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது.
சந்தேக நபர்களை அவர்களின் புகைப்படங்கள் மூலம் பின்னர் உறுதிப்படுத்திய மேற்கு தெற்கு குற்றப்பிரிவு, அவர்களை பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளது.
சந்தேகநபர்களின் விபரம்
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவர் கனன்கே பகுதியை சேர்ந்த 39 வயதான முன்னாள் கடற்படை வீரர் மனோஜ் உதயங்க ஆவார். அவர் ரூபஸ் ரமேஷ் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டதாகவும், அந்த பெயரில் வெளிநாட்டு கடவுச்சீட்டையும் வைத்திருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
குறித்த நபர் சுமார் 11 ஆண்டுகளாக கடற்படையில் இருந்து சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

சேவையை விட்டு வெளியேறியதிலிருந்து எந்த வேலையும் செய்யாத சந்தேக நபர், கடுமையான போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்பின்ர் திருட்டு சம்பவத்திற்காக சிறையில் இருந்தபோது அவரும் கரந்தெனிய சுத்தாவும் உறவை வளர்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரந்தெனிய சுத்தாவுடன் நெருக்கமான பலர்
இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்த தினுஜன சந்தருவன் ஆவார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வழக்கறிஞரைக் கொல்ல வந்த காரை ஓட்டிச்சென்றவர் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், அவரது உறவினர்கள் பலர் கரந்தெனிய சுத்தாவுடன் நெருக்கமானவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேக நபர் அங்கொட பகுதியைச் சேர்ந்த கெலும் சுஜீவ ஆவார், அவர் சந்தேகநபர்களுக்கு தங்குமிடம் வழங்கியுள்ளார்.
மேலும் அவர் மொனராகலை பகுதியில் வாடகைக்கு எடுத்த வீட்டில் மற்ற சந்தேகநபர்களுடன் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொலைக்கான உண்மையான பின்னணி மற்றும் இந்தப் பாதாள உலகக் கும்பலின் ஏனைய தொடர்புகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - ராகேஸ்
நடுவீதியில் கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே - மற்றொரு முன்னாள் சிஐடி அதிகாரி கைதாவாரா! நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam