பதவியேற்கும் மோடி: திரௌபதி முர்முவின் முறையான அழைப்பு
பாரதிய ஜனதா கூட்டணியின் தலைவர் நரேந்திர மோடி (Narendra Modi) மூன்றாவது முறையாக பிரதமராக நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார்.
அவரின் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ அழைப்பை இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (07.06.2024) விடுத்துள்ளார்.
நரேந்திர மோடி, இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையை இன்று இந்திய குடியரசுத்தலைவரான திரௌபதி முர்முவிடம் (Draupadi Murmu) கோரியுள்ளார்.
ஆட்சியமைக்கும் அழைப்பு
இதன்போது, அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான போதுமான உறுப்பினர்கள் தமது கூட்டணியில் இருப்பதாக தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலையும் நரேந்திர மோடி குடியரசுத்தலைவரிம் சமர்ப்பித்துள்ளார்.
இதனையடுத்து, நரேந்திர மோடியிடம் முறையாக ஆட்சியமைக்கும் அழைப்பை திரௌபதி முர்மு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
