மித்தெனியவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாதாள உலகப் புள்ளிகள்! பொலிசாருக்கு ஏமாற்றம்
தென்னிலங்கையின் மித்தெனிய பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற முக்கொலை குறித்த வழக்கின் சாட்சியங்களை சேகரித்துக் கொள்ள சென்ற பொலிசார் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
தென்னிலங்கையின் மித்தெனிய பிரதேசத்தில் மித்தெனிய கஜ்ஜா என்றழைக்கப்பட்ட பாதாள உலக செயற்பாட்டாளர் மற்றும் அவரது இரண்டு புதல்வர்கள் சில மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டின் மூலம் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
பொலிஸாருக்கு ஏமாற்றம்
குறித்த கொலையுடன் தொடர்புடைய பெக்கோ சமன் என்பவர் அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோரை அழைத்துச் கொண்டு கொலைச் சம்பவத்தின் விபரங்களைத் துப்புத் துலக்கவும், சம்பவத்துக்குப் பயன்பட்ட துப்பாக்கியை கைப்பற்றி, மேலும் சந்தே நபர்களைக் கைது செய்யவும் கொழும்பில் இருந்து மித்தெனிய சென்ற பொலிசார் வெறுங்கையுடன் பலத்த ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கியைத் தேடிக் கொள்ள முடியாமல் போயுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களும் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri