நானுஓயாவில் காணாமல்போன மாணவன் நீர்கொழும்பில் மீட்பு
நுவரெலியா - நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை முதல் காணாமல்போயிருந்த 12 வயது மாணவனான மகேந்திரன் ஆசான் நேற்றிரவு நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அயல் வீட்டில் உள்ள நபர் ஒருவரே இச் சிறுவனுக்குத் தொழில் பெற்றுத் தருவதாக ஏமாற்றி, நானுஓயாவிலிருந்து ரயில் மூலம் நீர்கொழும்புக்கு அனுப்பியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுவன், நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் இருப்பதைக் கண்ட உறவினர் ஒருவர், அவரை பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளார்.

சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை
காணாமல்போன சிறுவன் நீர்கொழும்புப் பகுதியில் இருக்கின்றார் என்று நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் ஊடாக நானுஓயா பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சிறுவனை நீர் கொழும்புக்கு அனுப்பிவைத்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri