காணாமல் ஆக்கப்பட்ட தன் மகனைத்தேடிய தாய் மரணம்! - தொடரும் துயரம் (PHOTOS)
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (21) இடம்பெற்றுள்ளது.
வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த கருப்பையா ராமாயி வயது 78 என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் வயது 38 கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.
மேலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடியோரில் நூற்றுக்கு மேற்பட்டடோர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






