முள்ளிவாய்க்காலில் காணாமல்போன அருட்தந்தையர்களின் நிலை
இறுதி யுத்தத்தின் போது பல அருட்தந்தையர்களும் காணாமல்போயிருந்தமை உண்மை.காணாமல்போன ஆயர்களை இன்னமும் காணாமல்போனவர்களின் உறவுகளுடன்,நாங்களும் தேடி வருகின்றோம் என யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.
காணாமல்போன அருட்தந்தையர்கள் தொடர்பில் அந்தந்த மறை மாவட்ட ஆயர்களினால் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இவை வத்திகான் வரை சென்றிருக்குமென நம்புகின்றேன்.
இருப்பினும் இது தொடர்பில் வத்திகான் நேரடியான எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற கோர யுத்தம் நிறைவுப்பெற்று நாளையுடன் 12 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில்,ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18ம் திகதி வரும் போது படையினரால் இவ்வாறான எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றது.இவை விதிவிலக்கல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,