மருத்துவப் பீட விடுதி மீதான தாக்குதல் பின்னணியில் ராஜாங்க அமைச்சர்: சிக்கிய ஆதாரங்கள்
கம்பஹா மாவட்டம் ராகமை மருத்துவப் பீடத்தின் ஆண்கள் விடுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துமாறு துறைக்கு பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு அமைய தகுதி தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தான் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
15 பேர் கொண்ட குழுவினர் இரண்டு வாகனங்களில் நேற்று விடுதிக்குள் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இரண்டு வாகனங்களில் வந்தவர்கள், ஒரு வாகனத்துடன் ஒருவரை அங்கு கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
WP KI – 2376 என்ற இலக்கத் தகடு பொருத்தப்படட வாகனத்தையே கைவிட்டுச் சென்றுள்ளனர். இந்த வாகனம் இலங்கை தெங்கு அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான வாகனம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைவிட்டுச் சென்ற வாகனத்தை பிடித்து வைத்த நபரையும் மாணவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அத்துடன் தாக்குதல் நடத்த வந்தவர்களில் ஒருவரை பணப் பை விடுதி வளாகத்தில் விழுந்து கிடந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில் இருந்த அடையாள அட்டையின் விபரங்களுக்கு அமைந்த பணப் பையை தவற விட்ட நபரின் பெயர் தினேஷ் கெலும் சமரதுங்க என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நபர் தெங்கு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின்(Arundika Fernando) தனிப்பட்ட ஊழியர்கள் குழுவின் உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது.
ராகமை மருத்துவப் பீடம் களனி பல்கலைக்கழகத்தின் பீடமாகும்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஒருவர் துபாய் நாட்டில் இருந்து நாடு திரும்பிய போது, அந்த நபரை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் வெளியேறும் முனையம் வழியாக நாட்டுக்கு அழைத்து வந்தார் என ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மீது ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ஜனாதிபதி கடும் நடவடிக்கை எடுப்பார் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri