அரபு நாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் ஏற்பாடுகள் ஆரம்பம்: சவூதி தூதுவருடன் அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சு(Photo)
அரபு நாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் முன்னோடி ஏற்பாடுகளில், சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் நேற்று (15) இலங்கைக்கான சவூதி அரேபிய பதில் தூதுவர் அப்துல்லா எ.எ.ஒர்கோபியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் சந்தர்ப்பமாக இந்த பேச்சுவார்த்தை அமைந்திருந்தது.
கலந்துரையாடல்

அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கருணாசேனா ஹெட்டியாராய்ச்சி மற்றும் சிரேஷ்ட இராஜதந்திரியான ரி.ஏ சம்சுடீன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில் சுற்றாடல் துறையின் மேம்பாடுகளால் அடையக்கூடிய அதிகளவான நன்மைகளை அடையாளங்காணல் மற்றும் அவற்றை நடைமுறைபடுத்துவதில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயற்படல் என்பது பற்றி பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.
ஒத்துழைத்து செயற்படல்

அத்துடன் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு, சவூதி ஒத்துழைக்க வேண்டியதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது.
முறையான எரிபொருள் விநியோகம், இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு விஷேட வசதிகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட விவகாரங்களையும் அமைச்சர் நஸீர் அஹமட் சவூதி அரேபிய தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளார்.
சவூதியில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் விடயங்களிலும் இந்த சந்திப்பில்
கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 17 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri