அமைச்சர் மஹிந்தானந்த சுயதனிமைப்படுத்தலில் ...
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
தமது பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த அபேசிங்க என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அறிந்து கொண்டது முதல் தாமும் தமது குடும்ப உறுப்பினர்களும் பணியாளர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தாம் உள்ளிட்டவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டதாகவும் இதில் இரண்டு சாரதிகளுக்கு கோவிட் தொற்று உறுதியாகியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமக்கு நடாத்திய முதல் பரிசோதனையில் கோவிட் தொற்று கிடையாது என பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிடடுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 27ம் திகதிக்கு பின்னர் தம்மையோ, தமது பணியாளர்களையோ சந்தித்திருந்தால் அவ்வாறானவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கோரியுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 35 நிமிடங்கள் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
