அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள முக்கிய பணிப்புரை
கிளிநொச்சி மாவட்டத்துக்கு வரவு செலவுத்திட்ட நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் ரூபா பணத்தை வெளிப்படைத்தன்மையுடன், மக்கள் நலன்சார்ந்து செலவிடுமாறு அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கு வரவுசெலவுத்திட்ட நிதியொதுக்கீட்டின் படி கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் ரூபா பணத்தை வெளிப்படைத்தன்மையுடன், மக்கள் நலன்சார்ந்து செலவிடுமாறு அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
2022ம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட நிதியொதுக்கீட்டின் படி, கிராமத்துடனான உரையாடல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியின் 95 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும், தலா 3 மில்லியன் படி 285 மில்லியன் ரூபாவும், இணைத்தலைவரின் ஒதுக்கீடாக 100 மில்லியன் ரூபாவும், 40 வட்டாரங்களுக்கும் தலா 4 மில்லியன் படி 160 மில்லியன் ரூபாவுமாக மொத்தம் 545 மில்லியன் ரூபா கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், முதலாவது காலாண்டுக்கென கிராமத்துடனான உரையாடல் திட்டத்துக்கு 58 மில்லியனும், வட்டாரங்களுக்கு 32 மில்லியனும், இணைத்தலைவரின் ஒதுக்கீடாக 20 மில்லியனுமாக, மொத்தம் 110 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை வெளிப்படைத்தன்மையுடன், மக்களுடைய நலன்களை நிறைவு செய்யக்கூடிய வகையில் நன்கு திட்டமிட்டுச் செலவிடுமாறு கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
கிராமத்துடனான உரையாடல் திட்டத்தின் படி கிளிநொச்சியின் 95 கிராம சேவையாளர் பிரிவுகளிலும்,இணைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர்கள் தலைமையில் பொதுமக்களுடனான நேரடிக் கலந்துரையாடல் மூலம் முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், சில கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நிதிப்பற்றாக்குறை உள்ள திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து இணைத்தலைவரின் நிதியொதுக்கீடு பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியையும் வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செலவிடுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கொடி பறக்கவில்லை! - ஐநா சபை விடுத்துள்ள எச்சரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
NEW ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam