உலக முடிவில் பிறந்தநாள் கொண்டாட்டம்: இருவர் படுகாயம்
மடூல்சீமை - எலமான் பகுதியில் அமைந்துள்ள சிறிய உலக முடிவு பகுதிக்கு அருகில் பிறந்தநாள் கொண்டாடிய ஐவரில் இருவர் பள்ளத் தாக்கில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம்(22.09.2023) இடம்பெற்றுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
உலக முடிவு பகுதிக்கு அருகாமையில் சானுவ பகுதியில் ஒருவர் தனது 25 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தனது நண்பர்கள் சகிதம் மது அருந்திக் கொண்டிருந்த வேளை கற்பாறையில் இருந்து வழுக்கி விழுந்துள்ளார்.
இதன் போது அவரைக் காப்பாற்றச் சென்ற மற்றைய நபரும் விழுந்து படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் 25 வயதுடைய பசறை பகுதியைப் சேர்ந்தவர்களாவர். மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
