அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தை புறக்கணித்த ரிஷாட் பதியுதீன்
இஸ்லாமிய மக்களின் தேசிய நிகழ்வுகளில் ஒன்றான மீலாதுன் நபி விழாவை இம்முறை மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்டம் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (26.08.2023 ) நடைபெற்றது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இராஜாங்க அமைச்சரும் அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் ஒழுங்கமைப்பில் புத்தசாசன மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

குறித்த மீளாய்வு கூட்டத்தில் 39 ஆவது தேசிய மீலாதுன் நபி விழாவை, முதல் முறையாக மன்னார் மாவட்டத்தில் நடத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விழாவிற்கான சுகாதார ஏற்பாடுகள்,போக்குவரத்து வசதிகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மீலாதுன் நபி விழா
அத்துடன் இவ்வருடம் மீலாதுன் நபி விழாவில் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ள உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த மீளாய்வு கூட்டத்தில் புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் , முஸ்லிம் விவகார அமைச்சின் பணிப்பாளர், உதவி பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறித்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan