மத்திய கிழக்கில் மோசமான நிலையை எட்டியுள்ள போர்: தீவிரமடையும் உச்சக்கட்ட தாக்குதல்கள்
ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கக் கூட்டுப்படைகளுக்கிடையிலான போர் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அரசு ஒளிபரப்பு நிறுவனம் மற்றும் முக்கிய இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 787 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் 180 பயணிகளுடன் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! 32 பேர் வைத்தியசாலையில்: தொடரும் மீட்பு பணி
ஒரே இடத்தில் அடுத்தடுத்து குண்டுவீச்சு
குறிப்பாக தெஹ்ரான் நகரின் மையப்பகுதியில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து இருமுறை குண்டு வீசும் 'டபுள்-டாப்' (Double-tap) தாக்குதல் நடத்தப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால் போர் முனை மேலும் விரிவடைந்துள்ளது.
மறுபுறம், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது இரண்டு ட்ரோன் (Drone) தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் தூதரக வளாகத்தில் தீ விபத்து மற்றும் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சவுதி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) ஈராக் நாட்டின் வடக்கு குர்திஸ்தான் பகுதியில் உள்ள எதிரி முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.
ஜோர்டான் வான்வெளி திறப்பு
போரின் தீவிரம் காரணமாக மூடப்பட்டிருந்த ஜோர்டான் நாட்டு வான்வெளி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில்,

ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளை (GCC) ஈரானுக்கு எதிரான நிலப்பாட்டை எடுக்கத் தூண்டக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக எரிசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் வளங்கள் குறிவைக்கப்பட்டால், அது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் இந்தத் தாக்குதல்களைக் குறைக்கும் என ஈரான் எதிர்பார்த்தாலும், இந்தப் போர் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்றே தற்போதைய சூழல் உணர்த்துகிறது.
இலங்கை கடற்பரப்பில் 180 பயணிகளுடன் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! 32 பேர் வைத்தியசாலையில்: தொடரும் மீட்பு பணி
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam