ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி: பிரதமர் அறிவிப்பு
ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (10.01.2024) கருத்து தெரிவிக்கும் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளது.
இது ஓய்வூதியர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஓய்வூதிய உதவித்தொகை வழங்குவதில் நாங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டோம்.
நீண்ட கலந்துரையாடல்கள்
இது பல ஆண்டுகளாக தாமதமாகி வருகிறது.
நெருக்கடியைத் தணிக்க நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையே இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடல்களால், முறையாக பணிகளைத் தொடங்க முடிந்தது.
அதன்படி, 2023 டிசம்பர் மாதத்திற்கான பணத்தை நிதி அமைச்சு ஒதுக்கியது ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
