நானுஓயாவில் மாயமான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாரண்டன் பகுதியில் நேற்றிரவு முதல் காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (09.09.2023) காலை கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா - கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே (வயது 49) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
நானுஓயா - கிரிமிட்டி நகரப் பகுதிக்குப் பொருட்கள் வாங்குவதற்குச் செல்வதாகக் கூறிவிட்டு நேற்றிரவு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
அவர் திருப்பி வராததால் குடும்பத்தினரும், பொதுமக்களும் இணைந்து தேடுதல் நடத்தினர். இந்நிலையில், இன்று காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இது தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri