நானுஓயாவில் மாயமான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாரண்டன் பகுதியில் நேற்றிரவு முதல் காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (09.09.2023) காலை கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா - கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே (வயது 49) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
நானுஓயா - கிரிமிட்டி நகரப் பகுதிக்குப் பொருட்கள் வாங்குவதற்குச் செல்வதாகக் கூறிவிட்டு நேற்றிரவு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
அவர் திருப்பி வராததால் குடும்பத்தினரும், பொதுமக்களும் இணைந்து தேடுதல் நடத்தினர். இந்நிலையில், இன்று காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இது தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan