அரசின் தீர்மானத்திற்கு எதிராக கொழும்பு ஒன்று கூடிய ஆளும் கட்சி உறுப்பினர்கள்!
கெரவலப்பிட்டிய - யுகதானவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை எதிர்க்கும் 11 ஆளும் கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று பொரளையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான ஜாதிக நிதஹஸ் பெரமுன, அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 அரசாங்கக் கட்சிகள் இதில் கலந்துகொண்டன.
இதேவேளை, பெற்றோலியம், மின்சாரம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை விற்பனை செய்வது மற்றும் எல்என்ஜி விநியோகத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
கே. நீங்கள் ஆட்சிக்கு கொண்டு வந்த குழுவிற்கு எதிரானவரா?
அமைச்சர் உதய கம்மன்பில - எமது பெற்றோர்கள் தவறு செய்தாலும் அது தவறு.
கேள்வி: 29ம் திகதி தேசிய சபையைக் கூட்டுகிறீர்களா?
அமைச்சர் உதய கம்மன்பில - நிச்சயமாக ஆம்.
கேள்வி: தேசிய சபைக்குள் அரசாங்கத்திற்கு எதிரான வேலைத்திட்டம் உள்ளதா? அரசுகளை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான திட்டமா?
அமைச்சர் உதய கம்மன்பில - பையை திறக்க ஏன் கவலைப்பட வேண்டும்?
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam