அமர்வுகளில் பங்கேற்க முடியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இன்றைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களினால் பங்குபற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பிரச்சினைகள் காரணமாக தம்மால் அமர்வுகளில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் வரிசையில் காத்திருப்பதற்கு அச்சம்

எரிபொருள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து நாடாளுமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள் எரிபொருள் வரிசையில் காத்திருப்பதற்கு அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்களினால் எதிர்ப்பு வெளியிடப்படும் என அவர்கள் அஞ்சுகின்றனர். மக்கள் தாக்கக் கூடும் என்ற அச்சத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை எரிபொருள் வரிசைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக சில சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
| இராணுவத்தினரை அழைக்கும் விசேட வர்த்தகமானி ஜனாதிபதியால் வெளியீடு |
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 9 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan