இராணுவத்தினரை அழைக்கும் விசேட வர்த்தகமானி ஜனாதிபதியால் வெளியீடு
ஆயுதப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் அதனை அண்டிய கரையோரங்களிலும் பொது அமைதியை நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இன்றைய திகதியில் (20) வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் 22 ஆம் திகதி முதல் ஒரு மாதம் நீடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.