கொழும்பில் தன்சல் வரிசையில் இடம்பெற்ற கோர விபத்து - சந்தேகநபர்களுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் கடந்த வெசாக் தினத்தன்று அன்னதான வரிசையில் கோர விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் கடந்த வெசாக் தினத்தன்று (31) சிற்றூந்து ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்திருந்ததுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்து ஹோமகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
நட்டஈடு வழங்க நடவடிக்கை
விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (16) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டபோது, நீதவான் ரஜேந்திர ஜெயசூரிய சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
பிலியந்தலையைச் சேர்ந்த அத்தநாயக்ககே டான் வசந்தா, அதே பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து செல்லக்குமார், வாடகைக் கார் சாரதி பிரதீப் குமார என்ற கேரேஜ் குமார, மற்றும் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த டான் சரத் ஹெட்டிகே ஆகியோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரது குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்த ஏனைய ஐந்து நபர்களின் குடும்பங்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நட்டஈடு வழங்க பிரதிவாதிகள் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சுரேஷ் சலேவின் மடிக்கணினிக்குள் மறைக்கப்படும் முக்கிய ஆதாரங்கள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri