சுரேஷ் சலேவின் மடிக்கணினிக்குள் மறைக்கப்படும் முக்கிய ஆதாரங்கள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தி விசாரணைகளுக்கு உதவுவதே அவர் செய்ய வேண்டிய சரியான காரியம் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
பாதுகாப்புப்படைகளுக்கு ஆதரவு
ஒரு முன்னாள் புலனாய்வு அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரி என்ற முறையில், தனக்கு தெரிந்த தகவல்களை மறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சுரேஷ் சலே தனக்கு தெரிந்தவற்றை வெளியிட்டு பாதுகாப்புப்படைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

குற்றப்புலனாய்வுத்திணைக்களம், குற்றப்புலனாய்வாளரை இடமாற்றம் செய்ய சிரமப்படவில்லை என்றும், மடிக்கணினி அல்லது கைப்பேசியில் உள்ள தகவல்களை உடனடியாக வழங்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தடுப்புக்காவலில் உள்ள சுரேஷ் சலேவின் நிலைமை மற்றும் அவர் வைக்கப்பட்டுள்ள சூழல் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
சுரேஷ் சலேவிற்காக எந்தவொரு சிறப்பு சிறையோ அல்லது சிறப்பு வசதிகளோ வழங்கப்படவில்லை. முந்தைய அரசாங்கங்களின் தடுப்புக்காவல் உத்தரவுகளின் கீழ் நபர்களை தடுத்து வைக்க பயன்படுத்தப்பட்ட அதே பொதுவான நடைமுறையே அவருக்காகவும் செயல்படுத்தப்படுகிறது.
உன்னிப்பாக கவனித்து வரும் அதிகாரிகள்
இருப்பினும், சுரேஷ் சலேவுக்கு தேவையான மருத்துவ மற்றும் மனிதாபிமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த அறிக்கையை மேற்கோள் காட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

சுரேஷ் சலே தனக்கு தேவை என்று கூறிய உடனேயே, தாமதமின்றி அவருக்கு சில மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். உறவினர்களால் உணவு வழங்கப்படுகிறது. அவர் கேட்கும் அனைத்தும் அவருக்கு வழங்கப்படுகின்றன." அவருக்காக ஒரு சிறப்பு அறை அமைக்கப்படவில்லை. அவர் முந்தைய கைதிகளைப் போலவே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், முந்தைய கைதிகள் முறைப்பாடு அளித்ததாக எந்த தகவலும் இல்லை. சலேவுக்காக நாங்கள் ஒரு தனிச்சிறை அறையை உருவாக்கவில்லை. முந்தைய அரசாங்கங்களின் தடுப்புக் காவல் உத்தரவுகளின்படியே அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கைதிகளைப் போலவே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தேவையான ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது. சுகாதார மற்றும் பாதுகாப்புப்படைகள் அதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன என்றும் விளக்கமளித்துள்ளார்.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri