அமெரிக்க முக்கிய பிரதிநிதியை சந்தித்த சுமந்திரன் - சித்தார்த்தன் உட்பட பலர்
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட், எம்.ஏ சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட பல கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வுக்கான நம்பிக்கைகள் குறித்து விவாதித்ததாக விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டவர்கள் தீர்வுகளை நோக்கி ஒன்றிணைந்து செயல்படும்போது, ஜனநாயகம் வலுப்பெறும் என்றும் கூறியுள்ளார்.
பல கட்சித் தலைவர்களையும் சந்தித்தார்
மேலும் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், இன்று (01.02.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின்போது, உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நிச்சயம் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் உறுதியளித்தார் என்று அரசியல் தலைவர்களிடம் விக்டோரியா நூலண்ட் கூறியுள்ளார்.
இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார்.
மேலும், காணிப் பிரச்சினை, அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பல விடயங்கள்
பற்றியும் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச்
செயலாளருடன் கலந்துரையாடினோம் என்றும் சுமந்திரன் எம்.பி. மேலும் கூறியுள்ளார்.