அம்பாறை - வீரமுனை வரவேற்பு வீதி வளைவு அமைப்பது தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டம்
வீரமுனை ஆண்டியடிச் சந்தி வரவேற்பு வீதி வளைவு (கோபுரம்)அமைப்பது சம்மந்தமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்துக்களை தனக்கு அறிவிக்குமாறு பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கமைவாக நேற்று (02) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் உயர்மட்ட கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அறிக்கை சமர்ப்பிப்பு
இக் கூட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை,வீதி அபிவிருத்தி திணைக்களம்,நீர்ப்பாசனத் திணைக்களம்,நகர அபிவிருத்தி அதிகார சபை,பிரதேச சபை,நில அளவைத் திணைக்களம்,பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்,கிராம சேவகர்கள் உட்பட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், வரவேற்பு வீதி வளைவு (கோபுரம்)அமைப்பது சம்மந்தமாக தனக்கு சாத்தியவள அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri
