யாழில் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்று பரிந்துரை குறித்து கூட்டம்
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், நேற்றையதினம்(27.05.2025) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாடில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பேரசிரியர் கே.பி.எல் சந்திரலால், பிரதிப் பணிபளர் நாயகம் கலாநிதி நிலந்த சப்புமானகே, இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க உள்ளிட்ட பிரதானிகள் பிரசன்னத்துடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்களின் கருத்துக்கள்
அதன்படி, இந்தக் கலந்துரையாடலில் கட்டண அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து பல்துறைசார் தரப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தியிருந்தனர்.

இதேவேளை, கடந்த 23ஆம் திகதி ஆரம்பமான குறித்த கலந்துரையாடல் ஜூன் 3ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்திருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri