வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ள காணி.. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்வி...!

Vavuniya Prime minister Harini Amarasuriya Pathmanathan Sathiyalingam
By Thileepan May 24, 2025 05:04 AM GMT
Report

எதிர்வரும் ஜுன் மாதம் 5ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 10,000, ஏக்கர் காணி வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதா என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு - கிழக்கு காணி பிணக்குகள் தொடர்பான கூட்டமொன்று பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (23.05.2025) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

இதன்போது அண்மையில் வெளியிடப்பட்ட காணிசுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அங்கு கருத்து தெரிவித்த சத்தியலிங்கம், "சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் வவுனியா மாவட்டத்தில் உள்ள வனப் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக அவ்வனத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு

காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு

வர்த்தமானி அறிவித்தல்கள் 

இதற்காக வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 10,000 ஏக்கர் காணி வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறிகின்றோம். ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் பெருமளவிலான பொதுமக்களிற்கு சொந்தமான காணிகள் உள்வாங்கப்பட்டிருந்தன. அவை இடம்பெயர்வுக்கு முன்பு மக்கள் குடியிருந்த மற்றும் அவர்களது பயன்பாட்டில் இருந்த காணிகளாகும்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ள காணி.. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்வி...! | Meeting In Parliament With Pm Harini Sathyalingam

எனவே வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தவதற்கு முன்னர் பொதுமக்களின் பாவனையிலிருந்த காணிகளை அடையாளங்கண்டு அவற்றினை முற்றாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், வவுனியா மாவட்டம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் மாணிக்கம் பண்ணைப்பகுதியில் (மெனிக்பாம்) 2009 இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டார்கள்.

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

குடியிருப்பு தேவை

2010ஆம் ஆண்டுக்கு பின்னர் படிப்படியாக மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு அங்கிருந்த மக்கள் முற்றாக வெளியேறிய நிலையில் கடந்த 15 வருடங்களாக இராணுவத்தினர் அந்தக்காணிகளை சுற்றி வேலிகள் அமைத்து பொதுமக்கள் உட்செல்வதற்கு தடை விதித்துள்ளதுடன் அங்கு விவசாயப் பண்ணை அமைத்து பயிச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். உண்மையில் இந்தக்காணிகள் பொதுமக்களுக்கு சொந்தமானவை.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ள காணி.. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்வி...! | Meeting In Parliament With Pm Harini Sathyalingam

அவை பலதரப்பட்ட காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள காணிகளாகும். எனவே மேற்படி காணிகளை விடுவித்து காணி உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வவுனியா நகரப்பகுதியில் மக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக 50 வருடங்களுக்கு முன்னர் காணிகள் நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தன.

50 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது மேற்படி காணிகளுக்கான உறுதி வழங்குவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. காணி உறுதிக்கு விண்ணப்பிக்கும் போது நகர எல்லைக்குள் தலா 02 பரப்பு காணிக்கே குடியிருப்பதற்கான காணி உறுதி வழங்கலாமெனவும் மீதமுள்ள காணிக்கு விவசாய மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கான காணி உறுதியே வழங்கமுடியும் என்று கூறப்படுகின்றது. எனவே மேற்படி குடியிருப்பு தேவைக்காக வழங்கப்பட்ட காணி முழுவதிற்குமான உறுதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் ” என கோரினார். 

தமிழர்களிடம் எதுவும் இல்லை - மீண்டும் தலைவர் வர வேண்டும்! மக்கள் ஆதங்கம்

தமிழர்களிடம் எதுவும் இல்லை - மீண்டும் தலைவர் வர வேண்டும்! மக்கள் ஆதங்கம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US