மாவையின் முயற்சிக்கு எதிராக கட்சிக்குள் இரகசிய நகர்வு
இந்த நிலையில் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் அறிந்த யாழ். மாவட்டத்தில் இருக்கக்கூடிய த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர், கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு பொறுப்பாக இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் கிழக்கு மாகாண விசேட இணைப்பாளராகவும் உள்ளவரை தொடர்பு கொண்டுள்ளார்.
இதன்போது, இந்த செயற்பாட்டை நாங்கள் அனுமதிக்க முடியாது. இப்படி நான்கு கட்சிகள் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமடைவது தமிழ் மக்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் என கூறியதாக விசேட இணைப்பாளர், தமிழரசுக் கட்சியின் ஊடகத் துறை சார்ந்தவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னணியை ஆராய்ந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு புதியவரொருவர் நியமிக்கப்படவுள்ள நிலையில், அதன் தலைவராக வருவேன் என்கின்ற கனவில் மிதந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கனவு இப்படியான கட்சிகள் ஒன்றிணைகின்ற பட்சத்தில் கேள்விக்குறியாகும் என அண்மையில் தனது ஆதரவாளர்களுடன் யாழில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இனிவரும் காலத்தில் முகநூல் வாயிலாக இப்படிப்பட்ட ஒன்றிணைந்தவர்களுக்கு எதிராக பிரச்சாரங்களை முடக்கி விடுகின்ற போது இது தானாக கலைந்து விடும். அத்துடன் இதற்கு முன்னர் இப்படியான ஒரு ஒன்றிணைவு முயற்சி எடுக்கப்பட்ட போது அதாவது வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது முரண்பட்ட கருத்துக்களால் அந்த முயற்சியானது கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஏழாம் திகதி இந்த கட்சிகளின் ஒன்றிணைவுக்கு எதிராக கொழும்பில் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்து இந்த முயற்சியை மீண்டும் குழப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
