ஜனாதிபதி மாளிகையில் 12 லட்சம் ரூபா பெறுமதியான மருந்து மற்றும் உபகரணங்கள் கொள்ளை
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக சென்றவர்கள், அங்குள்ள மருத்துவ நிலையத்தை தாக்கி, அதில் இருந்த 12 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகைக்குள் இருக்கும் மருத்துவ நிலையம் கடற்படையினரால் நடத்தப்பட்டு வந்துள்ளளது.
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு மத்திய பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றவர்கள், அங்குள் இந்த மருத்துவ நிலையத்திற்குள் புகுந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அங்கு களஞ்சியப்படுத்தி இருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை கொள்ளையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக கடற்படையினர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri