ஜனாதிபதி மாளிகையில் 12 லட்சம் ரூபா பெறுமதியான மருந்து மற்றும் உபகரணங்கள் கொள்ளை
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக சென்றவர்கள், அங்குள்ள மருத்துவ நிலையத்தை தாக்கி, அதில் இருந்த 12 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகைக்குள் இருக்கும் மருத்துவ நிலையம் கடற்படையினரால் நடத்தப்பட்டு வந்துள்ளளது.
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு மத்திய பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றவர்கள், அங்குள் இந்த மருத்துவ நிலையத்திற்குள் புகுந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அங்கு களஞ்சியப்படுத்தி இருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை கொள்ளையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக கடற்படையினர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri