மருந்துப் பற்றாக்குறை: நிலைமை மோசமாக உள்ளது என எச்சரிக்கை
2026இற்குள் மருந்துப் பற்றாக்குறை தீரும் என்று சுகாதார அமைச்சு உறுதியளித்த போதும், நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்கள் வர்த்தக சங்கக் கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
பல பெரிய வைத்தியசாலைகளில் நூற்றுக்கும் அதிகமான மருந்துகள் மிகையாக உள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இந்த மிகை இருப்புக்கு மத்தியில், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நீடிக்கிறது.
IV Noradrenaline, IV Cefotaxime, Levofloxacin போன்ற மருந்துகளும், சத்திரசிகிச்சைக்கான Nylon, Knee Implants போன்ற பொருட்களும் பற்றாக்குறையாக உள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இது சுகாதாரத் துறையின் ஆழமான நிர்வாக மற்றும் அரசியல் தோல்வி என்று மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் மற்றும் தற்போதைய சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளே இந்தப் பிரச்சினைக்கு நேரடிப் பொறுப்பாளிகள் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்கள் வர்த்தக சங்கக் கூட்டணியின் தலைவர், வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri