முற்றாக நின்று போயுள்ள மருந்து விநியோகம்
நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்களுக்கான மருந்து விநியோகம் முற்றாக நின்று போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள தடைக்கான காரணம்
எரிபொருள் இல்லாத காரணத்தினால், மருந்து தொகைகளை தனியார் மருந்தகங்களுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக்க கன்கந்த தெரிவித்துள்ளார்.
மருந்து விநியோகத்திற்கு முக்கியத்துவம் வழங்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாது போயுள்ளது.
அத்துடன் அரச மருத்துவமனைகளிலும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
