கொழும்பில் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்!பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாக கூறப்படும் பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலியின் விளக்கமறியல் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொகை பண மோசடி தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சிறைச்சாலைக்குச் சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்
இதற்கான அனுமதியை கொழும்பு கோட்டை நீதிவான் அனுமதியளித்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கையடக்கத் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் திலினி பிரியமாலி இன்று வெள்ளிக்கிழமை (25) மீண்டும் சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக அவரை டிசம்பர் 8 ஆம் திகதி சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலையாகவும் எக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலி 250 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி மேற்கொண்டுள்ளமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri