கொழும்பில் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்!பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாக கூறப்படும் பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலியின் விளக்கமறியல் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொகை பண மோசடி தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சிறைச்சாலைக்குச் சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்
இதற்கான அனுமதியை கொழும்பு கோட்டை நீதிவான் அனுமதியளித்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கையடக்கத் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் திலினி பிரியமாலி இன்று வெள்ளிக்கிழமை (25) மீண்டும் சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக அவரை டிசம்பர் 8 ஆம் திகதி சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலையாகவும் எக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலி 250 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி மேற்கொண்டுள்ளமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri