சம்பூரில் மனித எச்சங்கள்.. நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Trincomalee Sri Lankan Peoples
By Kiyas Shafe Aug 07, 2025 05:20 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

in சமூகம்
Report

சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன் பாதுகாப்புப்படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்களின் ஊடாக மனித வலு கொண்டு தோண்டுவதற்கான கட்டளையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

நேற்று (06) பிறப்பித்ததுடன் எதிர்வரும் 26ஆம் திகதி குறித்த வழக்கை மீள அழைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான சட்டமாநாடு நேற்று (06) மதியம் மூதூர் நீதிமன்றில் நீதிபதி எச்.எம்.தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இடம்பெற்றது.

கோர விபத்தில் நண்பர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

கோர விபத்தில் நண்பர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

உரிய ஆவணங்கள் 

குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) தொல்பொருள் திணைக்களம், காணாமல் போனோர் அலுவலகம், தேசிய கன்னிவெடி அகற்றல் சபையின் உத்தியோகத்தர்கள், MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை, பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், குறித்த பிரதேச காணி உத்தியோகத்தர், குறித்த பிரதேச கிராம உத்தியோகத்தர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

சம்பூரில் மனித எச்சங்கள்.. நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Mass Graves In Sampur Court Order

இதன்போது குறித்த வழக்கு தொடர்பான ஆலோசனைகள் மாவட்ட நீதிபதியினால் ஒவ்வொருவரிடமும் கேட்டறியப்பட்டது.

மேலும் குறித்த காணி தொடர்பாக பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் வினவப்பட்டபோது குறித்த காணி அரச காணி எனவும் குறித்த பகுதி மயானமாக பாவிக்கப்பட்டமைக்கான எந்தவித ஆவணங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பாக மேலதிக தகவல்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் கோரியபோது, குறித்த எச்சங்கள் மனிதனுக்குரிய எச்சங்கள் எனவும் அவை இயற்கை மரணத்தினூடான இடம்பெற்ற எச்சங்களா அல்லது குற்றத்தினூடாக புதைக்கப்பட்ட எச்சங்களா என்பது தொடர்பில் தங்களால் கூற முடியாது எனவும் ஆனால் அவை மூன்று மனிதர்களுடைய எச்சங்கள் எனவும் ஒன்று 25 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட வயதைக் கொண்ட ஆணினுடைய எச்சம் எனவும், மற்றையது 45 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட வயதைக் கொண்ட ஆணினுடை எச்சம் எனவும் முன்றாவது மனித எச்சம் 25 வயதிற்கு குறைந்த ஆணினுடைய மனித எச்சம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் வேறு இரு மனிதர்களுடைய இரு எச்சங்கள் ஒரே இடத்தில் இருந்து கிடைத்ததன் ஊடாக இது இயற்கையான மரணத்தின் ஊடாக புதைக்கப்பட்டது என்ற முடிவுக்கு வர முடியாது எனவும் கூறியிருந்தார்.

அடுத்த பொலிஸ் மா அதிபர் யார்.. விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

அடுத்த பொலிஸ் மா அதிபர் யார்.. விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

நீதிமன்றின் உத்தரவு 

அதேபோன்று தேசிய கன்னிவெடிகள் அகற்றும் உத்தியோகத்தர் தெரிவிக்கையில், இனிமேல் இதனை தோண்டுவதாக இருந்தால் அது அபாயகரமாக இருக்கின்ற காரணத்தினால் கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன் கிழக்கு மாகாண பாதுகாப்பு படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்கள் ஊடாக மனித வலு கொண்டு குறித்த பிரதேசம் தோண்டப்பட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதன் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்டவை மனித எச்சம் என்ற காரணத்தினாலும், அவற்றில் பலவகை மனிதர்களுடைய எச்சங்கள் என்ற காரணத்தினாலும், அப்பகுதியில் மயானம் இருந்தமைக்கான சான்றுகள் இல்லாத காரணத்தினாலும் குறித்த பிரதேசத்தினை மீளவும் தோண்டி அது தொடர்பான மேலதிக விசாரணைகளை செய்ய வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன் பாதுகாப்புப்படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்களின் ஊடாக மனித வலு கொண்டு தோண்டுவதற்கான கட்டளையை நீதிமன்றம் இன்று (06) வழங்கியுள்ளதுடன் எதிர்வரும் 26ஆம் திகதி குறித்த வழக்கை மீள அழைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பூரில் மனித எச்சங்கள்.. நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Mass Graves In Sampur Court Order

சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதன் பின்னர் மிதிவெடி அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மூதூர் நீதிமன்ற நீதிபதி உட்பட அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் பிரதிநிதிகள் கள ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் கடந்த யூலை 30 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியத் திணைக்களம் ஆகியவற்றினால் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வதை ஆராய்வதற்கான சட்ட மாநாட்டுக்காக இன்றையதினம் (06) நீதிமன்றினால் திகதியிடப்பட்டிருந்தது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US