அடுத்த பொலிஸ் மா அதிபர் யார்.. விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு
நாட்டின் 37ஆவது பொலிஸ் மா அதிபர் யார் என்பது குறித்த அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஜனாதிபதியின் பரிந்துரை
இதனை தொடர்ந்து நாட்டிற்கான புதிய பொலிஸ் மா அதிபராக பதவியேற்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு அதிகாரியின் பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைப்பார்.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர்களான லலித் பத்திநாயக்க மற்றும் அஜித் ரோஹண உள்ளிட்ட அதிகாரிகளில் ஒருவர் நாட்டின் 37ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படலாம்.
குறிப்பாக, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பொலிஸ் தலைமையகத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri