இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் மீட்பு(Video)
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள மண்டபம் முகாம் அருகே நேற்று(30) மாலை இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 கிலோ கடல் அட்டைகள் வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
பதுக்கி வைப்பு
மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
விசாரணை
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 480 கிலோ எடை கொண்ட கடல் அட்டையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் சர்வதேச மதிப்பு 50 லட்சம்
இருக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளனர்.