சுதந்திரத் தினத்தன்று மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் பலருக்கு விடுதலை!
சிறைச்சாலைகளில் உள்ள வயது முதிர்ந்தோர், நோய் வாய்ப்பட்டோர் ஆகியோரை எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்தே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் ஒவ்வொருவரின் தகவல்களும் தற்போது கோரப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தன்று கைதிகளுக்கு விடுதலை
சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைக்கு
அமைய வயது முதிர்ந்தோர் மற்றும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
எதிர்வரும் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
