நாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்!
நாட்டில் மூன்று மாவட்டங்களில் 21 கிராம் சேவகர் பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரித்துள்ளார்.
இரத்னபுரா மாவட்டத்தில் கலவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளும், இறக்குவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் ஒரு கிராம நிலதாரி பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலோ கந்த, ரம்புக, கத்லான, தனபெல, இம்புக்கந்த மற்றும் கலவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகொல, குபுக்மிட்டிய, குடாவ, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, தேவாலகம, கலஹாகம, கொஸ்வத்த, கபஸ்ஸர கந்த, வதுராவ, வெம்பிட்டியகொட, வெத்தாகல கிழக்கு, வெத்தாகல மேற்கு மற்றும் தவுலகலகம கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனித கும்ஹஸ் தோட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் பானந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள நாரம்பிட்டி கிராம சேவர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
