பிரித்தானியா செல்ல முற்பட்ட அகதிகளுக்கு ஏற்பட்ட நிலை! 31 பேர் வரையில் பலி
படகு மூலம் பிரித்தானியா செல்ல முற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கில் 31 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்தை அடைய முயன்றபோது ஆங்கிலக் கால்வாயில் படகு மூழ்கியதில் இவ்வாறு அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில் கோப்ரா அவசர குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்று டவுனிங் ஸ்ட்ரீட் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறைந்தது 30 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தான் ‘அதிர்ச்சியும், திகைப்பும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்ததாக’ பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
சட்ட விரோதமான முறையில் பிரித்தானியாவை அடைய முயலும் புலம்பெயர்ந்தோர் சம்பந்தப்பட்ட மிக மோசமான விபத்து இது என்று நம்பப்படுகிறது.
ஏமன், எரித்திரியா, சாட், ஈராக், ஈரான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து ஒரு மீட்புக் கப்பல் கலேஸ் துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் சிலரின் உடல்களை கப்பல் ஏற்றி வந்துள்ளதாக நம்பப்படுகின்றது. ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட பலி எண்ணிக்கை இப்போது 31 ஐ எட்டியுள்ளது.
You My Like This Video
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam