அநுர தரப்பின் கருத்தினால் அதிருப்தி அடைந்துள்ள மனுஷ!
கேள்விக்குரிய E8 வீசா திட்டத்தைப் பயன்படுத்தி, இலங்கையில் தற்போதுள்ள சட்ட நிபந்தனைகள் மூலம் நாட்டிற்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க தாம் உழைத்ததாக முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்போதைய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு வெளிநாட்டு வேலைக்காகவும் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும், இதுபோன்ற சூழ்நிலையில் தம்மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது தனது அரசியல் வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பாதகமானது என்றும் மனுஷ கூறியுள்ளார்.
500 மில்லியன் டொலர்
மாதாந்தம் 200 மில்லியன் டொலர்களில் இருந்து 500 மில்லியன் டொலர்களாக வெளிநாட்டுப் பணம் அனுப்பும் நடவடிக்கையில், இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் கொரிய வேலைகளுக்கு தொழிலாளர்களை பரிந்துரைப்பதை அதிகரிக்க பருவகால வேலை வாய்ப்புகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுஷ நாணயக்கார கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சந்தேகத்திற்குரிய E8 வீசா முறையைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்தமைக்க குறித்த கடிதத்தை அவர் அனுப்பிவைத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri