தாய் தமிழகத் தொப்புள் கொடியான் விஜயகாந்த் : இரங்கல் செய்தியில் மனோ தெரிவிப்பு
இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில் எம்மை நேசித்த, எமக்காகத் தமிழ் திரையுலகை அணி திரட்டிய, மதுரை மண்ணுக்கே உ ரிய வீரத் தமிழனாக எமக்காகக் குரல் எழுப்பிய தாய்த் தமிழகத் தொப்புள் கொடியான் என உணரப்பட்டவர் விஜயகாந்த் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தே.தி.மு.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, விஜயகாந்த், தமிழ்நாட்டு திரை வானிலும், பின் அரசியல் வானிலும் சூறாவளியாக எழுந்தார்.
தமிழ் திரையுலகை அணி திரட்டியவர்
இடையில் திடீரென அமைதி தென்றலானார். புரட்சி கலைஞர் என்ற தமிழ் நடிகர், தே.தி.மு.க. தலைவர் என்ற எழுச்சி அரசியல்வாதி என்ற பிரபல அடையாளங்களை மீறி சிறந்த மனிதர் என ஒட்டுமொத்த தமிழுலகில் அவர் அறியப்பட்டார்.
கடல் கடந்து இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில், எம்மை நேசித்த, எமக்காகத் தமிழ் திரையுலகை அணி திரட்டிய, மதுரை மண்ணுக்கே உ ரிய வீரத்தமிழனாய் எமக்காகக் குரல் எழுப்பிய தாய்த் தமிழகத் தொப்புள் கொடியான் என உணரப்பட்டவர் விஜயகாந்த். தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக, ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழர்களின் அஞ்சலிகளை அவருக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அவரது குடும்பத்தாருக்கும், அவரது தே.தி.மு.க. கட்சியினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
