நாமல் ராஜபக்சவிற்கு நாடாளுமன்றில் வைத்து கடுமையான பதிலடி கொடுத்த மனோ கணேசன்

Parliament of Sri Lanka Mano Ganeshan Namal Rajapaksa Israel Israel-Hamas War
By Mayuri Oct 20, 2023 04:08 PM GMT
Report

யுத்தம் தீர்வல்ல, அதற்கு காரணம் யாராகவும் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையான பதிலடியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (20.10.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கு முன்னால் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இத்தகைய பிரச்சினைகளை யுத்தத்தினால் தீர்க்கவே முடியாது. அதற்கு அப்பால் இருக்க கூடிய மூல காரணங்களை தேடி தீர்க்க வேண்டும் என்று கூறினார். 

விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை நாம் பிரிக்கவில்லை: முன்னாள் புலனாய்வு அதிகாரி அம்பலப்படுத்தும் விடயம்

விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை நாம் பிரிக்கவில்லை: முன்னாள் புலனாய்வு அதிகாரி அம்பலப்படுத்தும் விடயம்


மக்களுக்கு அனுதாபம்

மிகவும் மகிழ்ச்சியான விடயம். அது பாலஸ்தீனத்துக்கு மட்டுமல்ல. இலங்கைக்கும் பொருந்துகிறது என்பதை இந்த இடத்திலே ஞாபகப்படுத்தி எனது உரையை ஆரம்பிக்கிறேன்.

நாமல் ராஜபக்சவிற்கு நாடாளுமன்றில் வைத்து கடுமையான பதிலடி கொடுத்த மனோ கணேசன் | Mano Ganesan Gave A Stern Reply To Namal

இந்த சந்தர்ப்பத்திலே, காசாவில், மேற்குகரையில் நிகழக்கூடிய அடாவடி யுத்தத்தால், சண்டையால், சச்சரவால் உயிர்களை இழந்து, அவயங்களை இழந்து, துன்பப்படும் அப்பாவி மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல், காசாவில் இருந்து போராளிகளால் தாக்கப்பட்ட, உயிர்களை இழந்த அவயங்களை இழந்த, இஸ்ரேலின் தென் பகுதியில் வாழும் மக்களுக்கும், கடத்தபட்ட மக்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த சண்டை முழுமையான யுத்தம் அல்ல.

யுத்தம் என்றால் பல்வேறு சண்டைகளின் தொகுப்பு ஆகும். ஆகவே இந்த சண்டை என்பது அனைத்துக்கும் ஆரம்பம் அல்ல. இது ஆக ஹமாஸ் போராளிகளினால் ஆரம்பிக்கப்பட்ட சண்டை அல்ல.

முன்னிலை பட்டியலில் அரச ஊழியர்கள்: பதில் நிதியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

முன்னிலை பட்டியலில் அரச ஊழியர்கள்: பதில் நிதியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்


அதனால், தென் இஸ்ரேலில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். படை வீரர்களும் கொல்லப்பட்டார்கள். பலர் கடத்தப்பட்டர்கள்.

ஆனால், அது ஆரம்பம் அல்ல. இந்த யுத்தம் நீண்ட நெடுங்காலமான பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் அடாவடி ஆக்கிரமிப்பு காரணமாகத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதையும், மூல காரணம் பலஸ்தீன சகோதரர்களின் மீதான் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புதான் காரணம். இதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. நாமும் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

நாமல் ராஜபக்சவிற்கு நாடாளுமன்றில் வைத்து கடுமையான பதிலடி கொடுத்த மனோ கணேசன் | Mano Ganesan Gave A Stern Reply To Namal

பிரச்சினைக்கான அடிப்படை காரணம்

ஆகவே நாமல் ராஜபக்ச சொன்னதை போன்று இந்த பிரச்சினையின் அடிப்படை காரணம் கண்டறியப்பட வேண்டும். பாருங்கள், நேற்று முதல்நாள், காசா தீரத்தில் இருக்கக்கூடிய மருத்துவமனையின் மீது குண்டுகள் விழுந்தன. பாடசாலையின் மீது குண்டுகள் விழுந்தன. மக்கள் குடியிருப்புகளின் மீதும் குண்டுகள் விழுந்தன.  

இதேதான் இலங்கையிலும் நிகழ்ந்தது. இலங்கையிலும் அப்படித்தான். வடக்கு, கிழக்கில் யுத்தத்தின் போது, மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் விழுந்தன. அப்படித்தான் காசாவிலும் விழுகின்றது.   வடக்கு, கிழக்கில் பாடசாலைகளின் மீது குண்டுகள் விழுந்தன. அப்படித்தான் காசாவிலும் விழுகின்றது. இலங்கையில் வடக்கு, கிழக்கில் யுத்தத்தின் போது, மக்கள் வாழும் குடியிருப்புகளின் மீது குண்டுகள் விழுந்தன. அப்படித்தான் காசாவிலும் விழுகின்றது.

புலம்பெயர் மக்களிடம் அதிக பணம் உள்ளது! இலங்கை சொர்க்கத்தை போன்ற ஒரு தேசம்: தமிழ் தொழிலதிபர் (Video)

புலம்பெயர் மக்களிடம் அதிக பணம் உள்ளது! இலங்கை சொர்க்கத்தை போன்ற ஒரு தேசம்: தமிழ் தொழிலதிபர் (Video)


ஆகவே யுத்தம் தீர்வல்ல. அதற்கு காரணம் யாராகவும் இருக்கலாம். ஆனால், யுத்தம் தீர்வல்ல. ஆகவே அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. ஆகவே தீர்வு காணப்பட மூலகாரணம் கண்டறியப்பவேண்டும். இன்று, இவற்றை பார்த்துக்கொண்டிருக்கும் ஐநா சபையாக இருக்கலாம் அல்லது ஐநா மனித உரிமை ஆணையகமாக இருக்கலாம். அவர்கள் பல்லில்லாத பாம்புகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரங்கள் இல்லை.

இலங்கையிலும் அப்படி தான். இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் சாட்சியமில்லாத யுத்தமாக நிகழ்ந்தது. அதுதான் உண்மை. இன்று ஐநா நிபுணர்களால் அங்கு அரபு நாட்டிலே, பாலஸ்தீன யுத்தத்தை பார்த்து அறியக்கூடியதாக இருந்தாலும், இலங்கையில் அப்படியும் இருக்கவில்லை. அப்படி பார்த்து இருந்தாலும்கூட, அவர்களுக்கு பல்லில்லை. சர்வதேச சமூகம் என்று ஒரு சமூகம் இருகின்றது.

நாமல் ராஜபக்சவிற்கு நாடாளுமன்றில் வைத்து கடுமையான பதிலடி கொடுத்த மனோ கணேசன் | Mano Ganesan Gave A Stern Reply To Namal

தேசிய நலன்

அவர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம் என்று எதுவும் கிடையாது. ஆக, அவர்களுக்கு தத்தம் தேசிய நலன்கள்தான் இருக்கின்றன. அமெரிக்காவாக இருக்கலாம். இந்தியாவாக இருக்கலாம். ஐரோப்பாவாக இருக்கலாம். அவர்களுக்கு அவர்களின் தேசிய நலன்தான் நியாயம், நீதி, நேர்மை.

ஐநா சபையை பொறுத்தவரையிலே இலங்கை நடந்த யுத்தத்தில் நாப்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக, அவர்களது உள்ளக அறிக்கையில் சொல்லப்பட்டதாக  நான் அறிந்தேன். தமிழ் தரப்பை பொறுத்தவரையிலே ஒரு இலட்சத்துக்கு மேல் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஐநா சபை பாடம் படித்து கொண்டதாககூட அவர்களது உள்ளக அறிக்கையில் சொல்லப்பட்டதாக நான் அறிந்தேன். ஆனால், ஐநா பாடம் படிக்கக்கவில்லை.

உக்கிரமடையும் போர்: சவப்பெட்டிகளில் வருவதா என கலங்கி நிற்கும் இலங்கையர்கள் - சபையில் பகிரங்க எச்சரிக்கை

உக்கிரமடையும் போர்: சவப்பெட்டிகளில் வருவதா என கலங்கி நிற்கும் இலங்கையர்கள் - சபையில் பகிரங்க எச்சரிக்கை


பாடம் படித்து இருந்தால், காசாவில் இந்த அநியாயம் நடக்காது. மேற்கு கரையில் இந்த அநியாயம் நடக்காது. பாடம் படித்து இருந்தால், இந்த அநியாயம் நடக்காது. பெண்கள், குழந்தைகள் இப்படி கொல்லப்பட மாட்டார்கள். ஆகவே சர்வதேச சமூகம் அல்ல, ஐநா சபை அல்ல, நாங்கள்தான் பாடம் படிக்க வேண்டும். ஐநாவோ, சர்வதேச சமூகமோ எங்களை காப்பற்ற வராது.

இந்நாட்டுக்குள் நாம்தான் எம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டும். இன்று இந்த சபையில், அப்பாவி பலஸ்தீன மக்களுக்காக குரல் எழுப்பிய, அரசு தரப்பு, எதிர்தரப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் ஒன்று சொல்லி வைக்க விரும்புகிறேன். இதே நிகழ்வுகள்தான் இலங்கையிலும் நிகழ்ந்தன.

நாமல் ராஜபக்சவிற்கு நாடாளுமன்றில் வைத்து கடுமையான பதிலடி கொடுத்த மனோ கணேசன் | Mano Ganesan Gave A Stern Reply To Namal

பாலஸ்தீன பிரச்சினைக்கான தீர்வு

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வாக இன்று, இரண்டு நாடுகள், என்ற Two State தீர்வு இருக்க வேண்டும் என நாம் கூறுகிறோம். 1967ம் ஆண்டுக்கு முன் இருந்த நிலப்பகுதிக்கு இஸ்ரேல் மீளப்பெற வேண்டும். கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக கொண்டு சுதந்திர பாலஸ்தீன நாடு உருவாக வேண்டும். அதை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும்.

அதேபோல், இஸ்ரேல் நாட்டையும், இருப்பையும்  பாலஸ்தீன நாடு அங்கீகரிக்க வேண்டும். இதுதான் அங்கே தீர்வு. இலங்கையிலும் மீண்டும் யுத்தம் நிகழ வேண்டாம் என்றால், பிரச்சினை தீர வேண்டும் என்றால், சிங்களவர்களும், தமிழர்களும், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால், பாலஸ்தீனத்துக்கு ஒரு நியாயம். இலங்கைக்கு வேறு நியாயம் இருக்க முடியாது.

வெளிநாட்டுக்குச் சென்ற இலங்கை பெண் : 3 மாதங்களின் பின்னர் வெளியான அதிர்ச்சித் தகவல்

வெளிநாட்டுக்குச் சென்ற இலங்கை பெண் : 3 மாதங்களின் பின்னர் வெளியான அதிர்ச்சித் தகவல்


நாமல் ராஜபக்சவிற்கு நாடாளுமன்றில் வைத்து கடுமையான பதிலடி கொடுத்த மனோ கணேசன் | Mano Ganesan Gave A Stern Reply To Namal

இலங்கையில் இன்று தனிநாடு கோரிக்கை காணாமல் போய் விட்டது. ஆகவே ஒரே இலங்கைக்குள் தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சி வழங்குவதை சிங்களவர்கள் அங்கீகரிக்க வேண்டும். இங்கே வந்து பாலஸ்தீனத்துக்கு அனுதாபம் தெரிவிப்பது உண்மையாக இருந்தால், இதை நீங்கள் செய்ய வேண்டும். அதுதான் நியாயம் என குறிப்பிட்டுள்ளார்.  

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினரின் மோசடி: நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய அமைச்சர்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினரின் மோசடி: நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய அமைச்சர்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US