கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு பரிசீலனைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது - சுனில் ஹந்துன்னெத்தி எம் பி
கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என தொழில்துறை மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
நேற்று(27.08.2026) நடைபெற்ற மன்னார் தேசிய உப்பு நிறுவனம் புதிய நிர்வாகத் தொகுதி மற்றும் களஞ்சியசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2 கோடியே 58 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்திற்கு காலடி எடுத்து வைக்கும் பொழுது, நடப்பு அரசாங்கத்தின் ஒரு அமைச்சராக நான் வருகைத்தந்திருந்தேன்.
இன்று பல பேரையும் இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. அதே நேரத்திலே, நான் இந்த இடத்தில் பழைய மன்னார் உப்பு கூட்டுத்தாபனத்தின் கட்டிடத் தொகுதியின் ஒரு புகைப்படத்தை பார்த்தேன்.

இதனையடுத்து இந்த உப்பளத்தின் 4,000 ஏக்கர் நிலப்பரப்பையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற தேவைப்பாடு எங்களுக்கு இருந்தது. இதற்காக நாங்கள் 2 கோடியே 58 இலட்சம் ரூபாவை திரைசேரியிலிருந்து ஒதுக்கீடு செய்து இந்தக் கட்டிடத்தொகுதியை நாம் அமைத்திருக்கிறோம்.
இந்த உப்பு நிறுவனத்திற்காக நாம் ஒதுக்கிய இந்தப் பணம், உங்களது வியர்வையினால் பெறப்பட்ட பணமாகும். அதாவது, நீங்கள் உற்பத்தி செய்த உப்பினை விற்று பெற்ற இலாபத்தினால் திரைசேரிக்கு வழங்கப்பட்ட பணத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
தேசிய உப்பு உற்பத்தி
ஆகவே, இது உங்களுடைய சொத்து.உங்களது உழைப்பினால் இந்தப் பணம் சம்பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் சந்தோஷத்துடன் தெரிவிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், உங்களுக்குத் தெரியும், உப்பு இல்லாமல் உணவு இல்லை. ஆகவே, எல்லோருக்கும் உப்பு அத்தியாவசியமான ஒரு பொருள். ஆனால், எல்லோராலும் இந்த உப்பு உற்பத்தி செய்ய முடியாது.

உப்பு உற்பத்தி செய்வதற்கு ஒரு காலம் தேவை. அதே நேரத்தில், சிறந்த சூரிய ஒளி, கடல் நீர் மற்றும் நல்ல காற்று கிடைக்கப் பெற வேண்டும். இதன் ஊடாகவே தூய்மையான உப்பை உற்பத்தி செய்ய முடியும்.
உங்களுக்குத் தெரியும், 788 மில்லியன் ரூபாய் நாங்கள் இந்த உப்பு உற்பத்திக்கு முதலீடு செய்து, அதில் 2 கோடியே 58 மில்லியன் ரூபாய்கள் எங்களுக்கு வருமானமாகக் கிடைக்க பெற்றிருக்கின்றது.
அதே நேரத்தில், இந்த தேசிய உப்பு உற்பத்தியில் 100க்கு 30 சதவீதமான உப்பு மன்னார் உப்பளத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் இந்த இடத்திலே ஞாபகமூட்டல் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.



நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12