கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது
தலைமன்னார் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்ற இளைஞனை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த இளைஞர் வழிமறித்து சோதனையிட்ட போது 8 கிலோவும் 619 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 20 வயது உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபரை விசாரணை செய்து வருவதுடன், தாகவும்விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமன்னார் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.