மன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்
நீண்ட பயணத்தடைக்கு பின்னர் இன்று காலை பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்களும் தமது தாயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றனர்.
உள்ளூர், மாவட்ட ரீதியான அரச தனியார் போக்குவரதுக்குள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் மக்களின் நடமாட்டங்கள் குறைவாக காணப்படுவதுடன், அத்தியாவசிய சேவைகள் வழங்கும் நிலையங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.