பெருவில் தொடருந்து மோதி உயிர் தப்பிய குடிமகன்
பெருவில் தொடருந்து தண்டவாளத்தில் உறங்கி க் கொண்டிருந்த ஒருவர் மீது, தொடருந்து ஓன்று மோதிச் சென்ற போதும், அவர் உயிர் தப்பியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெதுவாக நகரும் சரக்கு தொடருந்துஓன்று, அவரை மோதுவதற்கு முன்பு அவர் அசையாமல் கிடப்பதை கண்காணிப்பு கருவிக் காட்சிகள் காட்டுகின்றன.
எனினும் நடந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் சிறிது நேரத்திலேயே எழுந்து நிற்கிறார்.
தண்டவாளத்தில் உறங்கிய நிலை
இதன்போது அவர் போதையில் இருந்ததாகவும், தண்டவாளத்தில் உறங்கிய நிலையில், தொடருந்து வருவதை உணரவில்லை என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், அந்த நபரின் இடது கையில் மாத்திரம் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன, இதனையடுத்து, அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காணொளி - https://tinyurl.com/9v8yn56r
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
