பொகவந்தலாவையில் ஆணின் சடலம் மீட்பு
நுவரெலியா, பொகவந்தலாவை - கொட்டியாகலை பிரதேசத்தில் உள்ள கால்வாயிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொட்டியாகலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் இன்று (02.11.2024) சனிக்கிழமை கால்வாயில் சடலம் இருப்பதைக் கண்டு உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
கொட்டியாகலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் குழாய்களுக்கு நீர் இணைப்பை வழங்கும் கால்வாயிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொகவந்தலாவைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமானது பிரேத பரிசோதனைக்காக திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
