பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் வெளியான தகவல்

Badulla Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Accident
By Dhayani Nov 02, 2024 09:00 AM GMT
Report

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவிகளின்  பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இரு மாணவிகளுக்கும் விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் திடீர் மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை நீதவான் நுஜித் டி சில்வா நேற்று (1) இரவு பதுளை போதனா வைத்தியசாலைக்கு சென்று சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனையை பதுளை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.எம்.கே.பி. விஜேதுங்க மேற்கொண்டுள்ளார்.

பதுளை பேருந்து விபத்திற்கான காரணம் வெளியானது: 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்..!

பதுளை பேருந்து விபத்திற்கான காரணம் வெளியானது: 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்..!

 

பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் வெளியான தகவல் | Badulla Bus Accident Update

பிரேத பரிசோதனை அறிக்கை

இதற்கமைய, இரு மாணவிகளின் மரணம் வாகன விபத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஏற்பட்ட திடீர் மரணம் என வைத்திய அறிக்கைகள் முடிவு செய்துள்ளன.

நேற்று (01) காலை (01) பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நீர்வீழ்ச்சியை கடந்து அம்பகஹஓய பிரதேசத்தில் பதுளையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியிருந்தது.

இதில் பேருந்தில் பயணித்த மூன்று விரிவுரையாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்தில் நிவிதிகல, தோலம்புகமுவ பஹல்கந்தவில் வசித்து வந்த எம்.ஜி.ஐ. உமயங்கனி (24) மற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த எம்.எம்.பி.டி. ஹெட்டிமுல்ல ஆகிய இரு மாணவிகள் உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்த இரு மாணவிகளின் இறுதிக் கிரியைகளை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையில் மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் வெளியான தகவல் | Badulla Bus Accident Update 

உயிரிழந்த மாணவியான தாயார் வெளியிட்ட தகவல்

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியான உமயங்கனியின் தாயார் மல்லிகா நிமல் சாந்தி மகளின் மரணம் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார்.மேலும் கூறியதாவது:

 “நேற்று எனது கணவரின் பிறந்தநாள். மகள் காலையில் தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் அவரது நண்பன் ஊடாக தந்தைக்கு கேக் அனுப்பியிருந்தார். பிறகு எனக்கு அழைப்பினை ஏற்படுத்தி பேசிக்கொண்டு சென்ற போதே மகள் விபத்தில் சிக்கி இறந்து போனதை அறிந்தேன்.

“இறந்தவர் எனது மூத்த மகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவி. எனக்கு மேலும் இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் படித்து வருகின்றனர்.

பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் வெளியான தகவல் | Badulla Bus Accident Update 

நான் சில காலம் பொலிஸ் சேவையில் இருந்தேன், பின்னர் பிள்ளைகளின் படிப்பின் காரணமாக விலகிவிட்டேன். கணவர் ஆசிரியராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலிருந்து மகள் தொலைபேசியில் அழைத்து எதிர்வரும் 31ஆம் திகதி பதுளைக்கு பயிற்சித் திட்டமொன்றுக்கு செல்லவுள்ளோம் என்றார்.

இதன்பின்னர் அங்கு சென்று அனைவரும் நேற்று இரவு (31) மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம் என தெரிவித்தார். என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை... கனவு போல இருக்கிறது. காலையில் பேசிய மகள் சில மணி நேரம் கழித்து விபத்தில் இறந்தது தெரியவந்தது என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் வெளியான தகவல் | Badulla Bus Accident Update 

மோசமான வானிலை

இந்த விபத்தில் காயமடைந்த விஞ்ஞான பீட விரிவுரையாளரை கொத்தலாவல விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு நேற்று மாலை (1) மேற்கொள்ளப்பட்ட முயற்சி அப்பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தோல்வியடைந்துள்ளது.

காயமடைந்த நபர் அம்புலன்ஸ் மூலம் பதுளை கால்பந்து மைதானத்திற்கு கொண்டு வரப்பட்ட போதிலும், மோசமான வானிலை காரணமாக விமானம் நிறுத்தப்பட்டதால், அவரை மீண்டும் பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் வெளியான தகவல் | Badulla Bus Accident Update

இதேவேளை, பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரையின் பிரகாரம் நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக இலங்கை விமானப்படையின் பெல் 412 ரக உலங்குவானூர்தி ஒன்று தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர ஆகியோரின் பணிப்புரையின் பேரில் பதுளை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பரிசோதகர் சானக சிரஞ்சீவ விஜேரத்ன, பொலிஸ் பரிசோதகர் ஜயதுங்க, பிரதி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எஸ். ரத்நாயக்க, உப பொலிஸ் பரிசோதகர் ஜினதாச, 54124 பீரிஸ் ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதுளை கோர விபத்து: காயமடைந்தவரை விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பும் முயற்சி தோல்வி

பதுளை கோர விபத்து: காயமடைந்தவரை விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பும் முயற்சி தோல்வி

இலங்கையின் வெளிநாட்டுக்கடன் தொகை விபரங்கள் வெளியாகியுள்ளன

இலங்கையின் வெளிநாட்டுக்கடன் தொகை விபரங்கள் வெளியாகியுள்ளன

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US