பதுளை பேருந்து விபத்திற்கான காரணம் வெளியானது: 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்..!

Badulla Sri Lanka Police Investigation Accident
By Dhayani Nov 02, 2024 01:13 AM GMT
Report

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், இலக்கம் 9, 10, 15 இல் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (01) காலை பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நீர்வீழ்ச்சியை கடந்து அம்பகஹஓய பிரதேசத்தில் பதுளையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

இதில் பேருந்தில் பயணித்த மூன்று விரிவுரையாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

பதுளை கோர விபத்து: காயமடைந்தவரை விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பும் முயற்சி தோல்வி

பதுளை கோர விபத்து: காயமடைந்தவரை விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பும் முயற்சி தோல்வி

 

பதுளை பேருந்து விபத்திற்கான காரணம் வெளியானது: 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்..! | Badulla Mahiyangana Bus Accident

சாரதியின் உடல்நிலை

மேலும், விபத்திற்குள்ளான பேருந்தின் சாரதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அது குறித்து வாக்குமூலம் பெற முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் இவ்வீதியில் சரிவு நோக்கி பயணிக்கும் போது பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், பெரும்பாலான விபத்துக்கள் வளைவின் கடைசிப் பகுதியிலேயே இடம்பெறுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த வீதிகளில் பயணிக்க அப்பகுதியினை சேர்ந்த சாரதிகளுக்கு மாத்திரமே தெரியும் என்றும், வெளி பகுதிகளில் இருந்து வரும் வாகன சாரதிகளுக்கு மலை பகுதியில் வாகனங்களை செலுத்த இயலாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தின் போது பேருந்தின் சாரதி மற்றும் உதவி சாரதியுடன் 41 பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் 36 பேர் மாணவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையின் வெளிநாட்டுக்கடன் தொகை விபரங்கள் வெளியாகியுள்ளன

இலங்கையின் வெளிநாட்டுக்கடன் தொகை விபரங்கள் வெளியாகியுள்ளன

பதுளை பேருந்து விபத்திற்கான காரணம் வெளியானது: 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்..! | Badulla Mahiyangana Bus Accident

 காயமடைந்தவர்கள் விபரம் 

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள்  தற்போது பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், இலக்கம் 9, 10, 15 இல் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இறுதி வருட மாணவர்கள் நேற்று (31) பதுளைக்கு வந்து எல்ல பிரதேசத்திற்கு சென்று பின்னர் பசறை பல்கஹதன்ன பிரதேசத்தில் தங்கி பயிற்சி நிகழ்ச்சிக்காக பதுளை வழியாக ரந்தேனிகல நோக்கி சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளை பேருந்து விபத்திற்கான காரணம் வெளியானது: 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்..! | Badulla Mahiyangana Bus Accident

இந்த விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள் பதுளை, இரத்தினபுரி, கேகாலை, பாதுக்க, அவிசாவளை, அலவ்வ, குருநாகல் போன்ற நாட்டின் பல பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இன்று அல்லது நாளை பேருந்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுர அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு

அநுர அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US