வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து சிறீதரன் எம்.பி முன்வைத்துள்ள கோரிக்கை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதியினைப் பெற்றுத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம்(5.3.2026) உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே ஆயிரக்கக்கான வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல ஆண்டுகளாக தமது உறவுகள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள்.காத்திருக்கின்றார்கள்.
கோரிக்கை
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இருவரை இந்த நாடு கூறவில்லை.
போரட்டத்தை நடாத்திய குடும்பங்களைச் சேர்ந்த அம்மாக்கள், அப்பாக்கள் 240 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் அதிகமானவர்கள் யுத்தத்திலே தனது கணவனை ஒப்படைத்த மனைவிமார்கள்,தனது பிள்ளைகளை ஒப்படைத்த அம்மாக்கள் என்பதை இந்த வரலாறு இலங்கைக்கு சொல்கின்றது.

தமது குடும்ப உறுப்பினர்களை ஒப்படைத்த எங்கள் சகோதரிகளுக்கான விடை என்ன.
இதேவேளை, செஞ்சோலையிலே பல பெண்குழந்தைகள் கொல்லப்பட்டார்கள்.அவர்களுக்கான நீதியும் இதுவரை கிடைக்கவில்லை.
எனவே , இந்த விடயங்கள் அக்கறை கொண்டு தமிழ் மக்களுக்கான நீதியினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam