இலங்கையின் வெளிநாட்டுக்கடன் தொகை விபரங்கள் வெளியாகியுள்ளன
2024ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கையின் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட வருடத்தின் மத்திய நிதி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி வரையிலான மொத்தக் கடன் சேவைக் கொடுப்பனவுகள் 503.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இதில் 275.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அசலை திருப்பிச் செலுத்துவதாகவும், மீதி 227.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள், வட்டிச் செலுத்தலாகவும் இருந்தது.
நிதியமைச்சின் அறிக்கை
முன்னதாக, வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவது 2022 ஏப்ரல் 12ஆம் திகதி முதல் இடைக்காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, 5,670 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2,527 மில்லியன் டொலர்கள் வட்டி என்பன 2021 ஜூன் இறுதிவரையில் செலுத்தப்படாத கடன் சேவையாக குவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் அறிக்கை கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam