யாழில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 2 பிள்ளைகளின் தந்தை
சட்ட விரோத மதுபானம் குடித்துவிட்டு கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தெற்கு-மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கணேசராசா சுபாகரன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பூட்டியிருந்த வீடு
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 29ஆம் திகதி வீடு ஒன்றிற்கு சென்று கசிப்பு குடித்துள்ளார்.
பின்னர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் அந்த வீட்டுக்கு சட்ட விரோத மதுபானம் குடிக்க சென்ற நிலையில் அந்த வீடு பூட்டியிருந்துள்ளது.
இந்தநிலையில் குறித்த நபர் அந்த வீட்டுக்கு முன்னால் உள்ள பழைய கிணற்றுக்கு அருகாமையில் உறங்கியதாக தெரியவந்துள்ளது.
மரண விசாரணை
பின்னர் உறவினர்கள் அவரை தேடியவேளை நேற்று முன்தினம்(30) கிணற்றில் சடலமாக காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.